கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 17ம் தேதியன்று (நாளை) நடைபெறவுள்ளது.
இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் பங்குபெறலாம்.
இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, 17.3.2017 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இத்தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்யில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.