பல்லடத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்து - குழந்தை உட்பட 10 பேர் காயம்

பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து தேனி நோக்கி பல்லடம் வழியாக வந்த அரசு பேருந்தும், கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து நிலையம் முன்பு சாலையை கடக்க முயன்ற போது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பேருந்து நிலையம் முன்பு நிகழ்ந்த இந்த விபத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய பேருந்துகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு காயங்களுடன் குழந்தைகள் உட்பட 10 பயணிகள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து வந்த ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...