கோவை முதல் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை ஜுலை முதல் துவக்கம்

கோவை முதல் கொழும்புவிற்கு நேரடியாக செல்ல ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது புதிய சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளக்கக் கூட்டம் மார்ச் 15ம் தேதியன்று நடைபெற்றது. 

இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.

இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 

மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...