கோவை முதல் கொழும்புவிற்கு நேரடியாக செல்ல ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது புதிய சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளக்கக் கூட்டம் மார்ச் 15ம் தேதியன்று நடைபெற்றது.
இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.
இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.
இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.