தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க வேண்டும் - கோவையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், "சுமார் 1000 சதுரடி வரை வணிக நோக்கத்தோடு கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வர வேண்டும், சுமார் ஆறு அல்லது எட்டு வீடுகள் வரை உள்ள கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு கொடுப்பதற்கு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இயக்கத்தின் தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதில் நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...