உலக மனநல தினத்தை முன்னிட்டு Healboxx-ன் 'மன ஆரோக்கியம்' குறித்து விழிப்புணர்வு முகாம்

உலக மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மன ஆரோக்கியம் விழிப்புணர்வு முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: பயனாளர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் Healboxx செயலி மூலம் உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று Healboxx செயலியின் நிறுவனர் நான்சி குரியன் கூறியுள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஹீல்பாக்ஸ் 'மன ஆரோக்கியம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இந்த முகாமானது, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கவும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்விலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



தற்போதைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம் போலவே மனநலமும் முக்கியமானது. பலர் மனநலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. சரியான வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை துயரத்துடன் முடித்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் பலர் ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் உள்ளனர்.

உளவியலாளர்களிடம் பேசுபவர்கள் குறைந்த மன அழுத்தத்தை கொண்டுள்ளனர். மேலும் அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாக உள்ளனர். கவனிக்கப்படாத மன அழுத்தத்தின் சிறிய அளவு தற்கொலை எண்ணத்திற்கு வழிவகுக்கும் என்பதை உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து, Healboxx செயலியின் நிறுவனர் நான்சி குரியன் மற்றும் இணை நிறுவனர் மேத்யூ குரியன் கூறுகையில், Healboxx தனி நபர்கள், தம்பதிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் ஆலோசனை வழங்கும் செயலியாகும். Healboxx-ல் இணைந்துள்ள அனைத்து உளவியல் நிபுணர்களும் நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களாகும்.

பயனாளர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் Healboxx செயலி மூலம் உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் Healboxx செயலி மூலம் மிக எளிதாக பயனாளர்கள் பயனடையுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஆலோசனையானது மனநிலையை மேம்படுத்தவும், மனநோய்க்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும், தகவல் தொடர்பு மற்றும் உறவுகளை மேம்படுத்தவும், சுயமரியாதை மற்றும் பின்னடைவை மேம்படுத்தவும் Healboxx செயலி உதவும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...