கோவை மாவட்ட மகளிர் கால்பந்து போட்டி- நிர்மலா கல்லூரி முதலிடம்

கோவை மாவட்ட கால்பந்து சங்க பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைக்கேல் காப் கல்லூரியை விழத்தி நிர்மலா கல்லூரி கோப்பையை வென்றது.


கோவை: கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில் நிர்மலா கல்லூரி முதல் இடம் பிடித்தது.

கோவை மாவட்ட கால்பந்து சங்க, பெண்கள்‌ கால்பந்து சுழற்கோப்பை ஓபன்‌ கேட்டகரி 9.10.2023 மறறும்‌ 10.10.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ குமரகுரு பன்முகக்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெற்றது. இதனுடைய இறுதிப்போட்டி மற்றும்‌ பரிசளிக்கும்‌ விழா 10.10.2023 அன்று மாலை 4 மணியளவில்‌ குமரகுரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில்‌ நடைபெற்றது. நாக்‌ அவுட்‌ முறையில்‌ நடநத இப்போட்டியில்‌ 14 அணிகள்‌ பங்கேற்று விளையாடின.

தகுதிச்சுற்று ஆட்டங்களில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அணிகளுக்கு இடையே போட்டிகள்‌ நடத்தப்பட்டு இறுதியாக 4 அணிகள்‌ முதல்‌ நான்கு இடங்களைப்‌ பெற்றது.

நிர்மலா மகளிர்‌ கல்லூரி 3-0 என்ற கோல்‌ கணக்கில்‌, மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரியை வென்று முதல்‌ இடத்தை பிடித்தது. இரண்டாம்‌ இடத்தை COLDS GH ஜாப்‌ கல்லூரியும்‌ செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிக்குலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி முறையே ஏ, பி அணிகளாக மூன்றாம்‌, நான்காம்‌ இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. முதல்‌ இடத்தை தட்டிச்சென்ற நிர்மலா மகளிர்‌ கல்லூரிக்கு ரொக்க பரிசு ரூ.5000 மறறும்‌ கேடயமும்‌ இரண்டாம்‌ இடத்தை பெற்ற மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரிக்கு ரூபாய்‌ 3000 ரொககபரிசும்‌ , கேடயமும்‌ மூனறாம்‌ இடத்தை பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி ஏ அணிக்கு ரொக்கபரிசு ரூபாய்‌ 2000, கேடயம்‌ வழங்கப்பட்டது. நான்காம்‌ இடம்‌ பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி பி அணிக்கு கேடயம்‌, சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர்‌ முனைவர்‌. பேராசிரியர்‌.அஜீத்குமார்‌ லால்‌ மோகன்‌, பரிசுகளையும்‌ கேடயங்களையும்‌ சான்றிதழ்களையும்‌ வழங்கி கெளரவித்து சிறப்புரையாறறினார்‌.

குமரகுரு கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌.விஜிலா எட்வின்‌ கென்னடி வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்தினார்‌.

கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர்‌ .கிருஷ்ணமூர்த்தி மறறும்‌ உறுப்பினர்கள்‌ உடனிருந்தனர்‌.

இப்போட்டிகளில்‌ கால்பந்து வீராங்கனைகள்‌ ஆர்வமுடன்‌ கலந்துகொண்டு விளையாடினர்‌. விளையாட்டு ஆர்வலர்கள்‌ வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்‌.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...