திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளை சார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருப்பூர்: பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மனுவாக கொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளைசார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுக்கப்பட்டது. ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகிறது.

தொடர்ச்சியாக தரமற்ற மின்விநியோகத்தால் லோவேல்டேஜில் மின்சாரம் வருவதால் பேன் மிக்சி கிரைண்டர் அயர்ன்பாக்ஸ் உட்பட வீட்டுமின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல்நிலைக்கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சீரான மின்சாரம் வழங்கிடவும் மேல்நிலைகம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி இந்தியஜனநாயக வாலிபர்சங்ம் சார்பில் பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துபெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசப்பட்டது.

உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் DYFI உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, அஜித்குமார், சுரேஸ், சின்னகருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உட்பட கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளைசார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுக்கப்பட்டது. ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகிறது.
தொடர்ச்சியாக தரமற்ற மின்விநியோகத்தால் லோவேல்டேஜில் மின்சாரம் வருவதால் பேன் மிக்சி கிரைண்டர் அயர்ன்பாக்ஸ் உட்பட வீட்டுமின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல்நிலைக்கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சீரான மின்சாரம் வழங்கிடவும் மேல்நிலைகம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி இந்தியஜனநாயக வாலிபர்சங்ம் சார்பில் பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துபெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசப்பட்டது.
உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் DYFI உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, அஜித்குமார், சுரேஸ், சின்னகருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உட்பட கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.