கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வராமல் சென்ற 2 அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அபராதம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை அருகே பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பேருந்துகள் கருமத்தம்பட்டியில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளிச்சென்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.



உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...