கவுண்டம்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு - லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்புவை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஆனைக்கட்டி வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாகப்பாம்புவை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் ஸ்ரீதர். சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தீடிரென நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் சத்தம்போட அங்கு வந்த ஸ்ரீதர் உடனடியாக டப்பா வைத்து நாகபாம்பை மூடி வைத்துவிட்டு கவுண்டம்பாளையத்திலுள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டப்பா வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்த நாகபாம்பை பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 2 அடி தான் இருந்தது. ஆனால் என்னை பிடிக்க வந்தது யார் என்று கேட்பதுபோல படமெடுத்து பயத்தை அங்கிருந்தவர்களுக்கு காட்டியது.



உடனே வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அந்த பாம்பை ஆனைகட்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 2 அடி உள்ள பாம்பை பிடிக்க தண்ணீருடன் இருந்த தீயணைப்பு லாரியை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலைமை இருந்தது. இதுபோன்ற இடத்திற்கு செல்ல சின்ன வாகனம் தீயணைப்பு துறைக்கு கொடுத்தால் அவர்கள் விரைவாக வந்து வேலையையும் விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...