தென்னை விவசாயிகளிடம் இருந்து மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இலக்கான 22000 மெ.டன் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசால் கொப்பரை கொள்முதல் இலக்கு அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி (1500 மெ.டன்) ஆனைமனை (1200 மெ.டன்), செஞ்சேரி மலையடிப்பாளையம்) (1000 மெ.டன்), காரமடை (1000 மெ.டன்), சூலூர் (1000 மெ.டன்), கிணத்துக்கடவு (900 மெ.டன்) அன்னூர் (800 மெ.டன்), நெகமம் (800 மெ.டன்), தொண்டாமுத்தூர் (700 மெ.டன்) மற்றும் கோயம்புத்தூர் (500 மெ.டன்) ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கூடுதலாக 9400 மெ.டன் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60. க்கும் மற்றும் 400 மெ.டன் பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் 25.11.2023 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடிதத்தின்படி ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...