ஈ.சி என்ற பூச்சி மருந்தை  உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கோவை வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும் ஈகோ பயோசைட்ஸ்‌ மற்றும் பொட்டானிக்கல்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்டுடன பூச்சி மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது.


கோவை: பூச்சி தாக்குதலை ஆறு மாதத்திற்கு கட்டுப்படுத்தும்‌ திறமை படைத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ வேளாண்‌ வளாக மேம்பாட்டு இயக்குனரகம்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்படும்‌ தொழில்நுட்பங்கள்‌, இயந்திரங்கள்‌ மற்றும்‌ வீரிய ஒட்டு ரகங்கள்‌ ஆகியவற்றை வணிகமயமாக்கி வருகின்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தேனியை சார்ந்த ஈகோ பயோசைட்ஸ்‌ & பொட்டானிக்கலஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ இடையய “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்‌ வசம்பு 6 சதம்‌ ஈ.சி” என்ற பூச்சி மருந்தை பெரிய அளவில்‌ உற்பத்தி செய்து சந்தைப்படுத்த பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.க கீதாலட்சுமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்து, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையத்திலுள்ள பூச்சியியல்‌ துறை விஞ்ஞானிகளால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூச்சி மருந்து, வசம்பு கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்‌ கொண்டு தயார்‌ செய்யப்படுகின்றது. இந்தப்‌ பூச்சி மருந்து உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு மற்றும்‌ கொண்டைக்கடலை விதைகளில்‌ பூச்சி தாக்குதலை ஆறு மாதத்திற்கு கட்டுப்படுத்தும்‌ திறமை படைத்தது.

தமிழ்நாடு வேளாணர்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சார்பில்‌ அதன்‌ பதிவாளர்‌ (முனைவர்‌ ஆர்‌.தமிழ்வேந்தன்‌, மற்றும்‌ ஈகோ பயோசைட்ஸ்‌ & பொட்டானிக்கலஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ சார்பாக அதன் நிர்வாக இயக்குனர்‌ .எம்‌.கருணாகரன்‌ ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

வேளாண்‌ வளாக மேம்பாட்டு இயக்குனர்‌ முனைவர்‌ ஈ.சோமசுந்தரம்‌, பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ எம்‌.சாந்தி, பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சா.ஜெயராஜன்‌ நெல்சன்‌ ஆகியோர்‌ இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...