இ - பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரி உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் இ-பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரியும் உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ-பைலிங் நடைமுறை கொண்டு வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, மாவட்ட கூடுதல் 4-வது நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அது தவிர உடுமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ- பைலிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அந்த முடிவினை எதிர்த்தும், இ-பைலிங் நடைமுறையை 6 மாதகாலம் ஒத்திவைக்க கோரியும், அதற்குள் பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...