மாநில அளவிலான தடகள போட்டி - தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் தாராபுரம் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்


திருப்பூர்: தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் நடைபெற்றது.

அதில் பல்லடத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் 5 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் மாணவர் அன்புச் செல்வன் ஈட்டி எறிதல் போட்டியில் 44.38 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், மாணவர் தர்ஷன் 1.65 மீட்டர் உயரம் தாண்டி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அன்பு செல்வன் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் மாநில அளவில் தடகளப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரை பள்ளி தாளாளர் டாக்டர் தங்கராஜ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...