வரும் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக் ஊக்கத் தொகை - கோவை மாநகராட்சி அறிவிப்பு

2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்து வரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023-க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5 சதவீதம் ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாநகராட்சி செலுத்தவேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகைகள்‌ முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்துமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023-க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5% ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

எனவே, பொது மக்களின்‌ வசதியினை கருத்தில்‌ கொண்டு கோயம்புத்துர்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகைகள்‌ முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்த ஏதுவாக கீழ்க்கண்ட பகுதிகளில்‌ 14.10.2023 மற்றும்‌ 15.10.2023 ஆகிய நாட்களில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.56 மற்றும்‌ 57 பகுதிகளுக்கு ஒண்டிபுத்தூர்- நெசவாளர்‌ காலனி- சுங்கம்‌ மைதானத்திலும்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 35ல்‌ இடையாபாளையம்‌ - தேவாங்க நகா்‌-கற்ப விநாயகர்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு 39ல்‌ தொண்டாமுத்தூர்‌ ரோடு-தச்ஸா சான்ஸ்ட்ராய்‌ முதலாம்‌ அடுக்குமாடி குடியிருப்புகளிலும்‌, 40 வி.என்‌.ஆர. நகா்‌ நியாயவிலைக்கடையில்‌ சனிக்கிழமை அன்றும்‌, வார்டு 75ல்‌ சீரநாயக்கன்‌பாளையம்‌ நேத்தாஜி சாலை - மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்தில்‌ ஞாயிற்றுக்‌ கிழமைகளிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளன.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு 88ல்‌ குனியமுத்தூர்‌ - தர்மராஜா கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு 94ல்‌ மாச்சம்பாளையம்‌ - மாரியம்மன்‌ கோவில்‌ வாளத்திலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளன. வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.11ல்‌ ஜனதா நகர்-ஆரம்பப்பள்ளியிலும்‌, வார்டு எண்‌.28ல்‌ இளங்கோ நகர்-மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும்‌, 25ல்‌ காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்‌ பள்ளியிலும்‌ நடைபெறுகிறது. மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 32ல்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு 63ல்‌ பெருமாள்‌ கோவில்‌ வீதி பகுதியிலும்‌, வார்டு எண்‌ 80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில்‌ நடைபெறும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 வரை செயல்படும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இவ்வசதியினை முழுமையாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை செலுத்தலாம்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...