தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நாளான இன்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தாமதமாகிக்கொண்டே வரும் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அலுவல் பணியில் உதவி இடைநிலை இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கிடப்பில் உள்ள அதிகாரிகள் இடமாற்றத்தினை நிரைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்ததால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சுமார் 180-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நாளான இன்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தாமதமாகிக்கொண்டே வரும் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அலுவல் பணியில் உதவி இடைநிலை இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கிடப்பில் உள்ள அதிகாரிகள் இடமாற்றத்தினை நிரைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்ததால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சுமார் 180-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.