கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தாராபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் அறிவுரையின் படி முறையான உணவை உட்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

தாராபுரம் அருகே பொன்னாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் செல்லாம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சின்னக்காம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.

முகாமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி தொடங்கி வைத்து 10 கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10 நபர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

பிறகு அமைச்சர் கயல்விழி பேசியதாவது:-

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் அனைத்து மருத்துவர்கள் மக்களைத் தேடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களுக்கு நோய்கள் குறித்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த கொதிப்பு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆகியவற்றை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஸ்கேன், இ.சி.ஜி. எடுக்கப்பட்டு உடல் நலம் குறித்து தெரிவிக்கப்படும்.

அதே போன்று கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சரியான காய்கறிகளை உட்கொண்டு முறையான காலத்தில் டாக்டர்கள் அறிவுரையின் பேரில் பரிசோதனை செய்து கொண்டு குழந்தைகளை நல்ல முறையாக பெற்று எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண் காட்சி மற்றும் ஊட்டசத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். அரசு வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில்

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரகள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 250 பெண்கள் உள்பட 600 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்யப்பட்டது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் கன்னீஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...