பி.ஏ.பி பாசனத்தில் தண்ணீர் திருட்டு - பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள 12 மின் இணைப்பு துண்டிப்பு

பி.ஏ.பி பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகளின் குழுவினர் 12-மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார்,வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.

பி.ஏ.பி நான்காம் மண்டலத்தில் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்கம்பாளையம், நாரணாபுரம் பொன்னாபுரம் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி பாசனப்பகுதியில் மேல் ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீர் சப்ளையின்போது ஒஸ் போட்டு தண்ணீர் திருடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாசன வாய்க்காலை ஒட்டி 50-மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தனர்.



தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.



ஒவ்வொரு மின்இணைப்பை துண்டிக்கும் போதும் அந்த மின் இணைப்பு பெற்ற விவசாயின் குடும்பத்தினர் தடுத்தனர்.

அதிகாரிகள் விதிப்படி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதாக கூறி துண்டித்தனர்.

நாராணபுரம் பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மின் இணைப்பு துண்டிப்பு விஷயத்தில் சில விளக்கங்கள் தேவை என்று கூறியதையடுத்து மின்இணைப்பை துண்டிக்கும்பணி நிறுத்தப்பட்டது.16-தேதி விவசாயிகள்குழு தாராபுரம் கோட்டாட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...