பி.ஏ.பி பாசனத்தில் தண்ணீர் திருட்டு - பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள 12 மின் இணைப்பு துண்டிப்பு

பி.ஏ.பி பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகளின் குழுவினர் 12-மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார்,வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.

பி.ஏ.பி நான்காம் மண்டலத்தில் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்கம்பாளையம், நாரணாபுரம் பொன்னாபுரம் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி பாசனப்பகுதியில் மேல் ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீர் சப்ளையின்போது ஒஸ் போட்டு தண்ணீர் திருடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாசன வாய்க்காலை ஒட்டி 50-மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தனர்.



தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.



ஒவ்வொரு மின்இணைப்பை துண்டிக்கும் போதும் அந்த மின் இணைப்பு பெற்ற விவசாயின் குடும்பத்தினர் தடுத்தனர்.

அதிகாரிகள் விதிப்படி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதாக கூறி துண்டித்தனர்.

நாராணபுரம் பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மின் இணைப்பு துண்டிப்பு விஷயத்தில் சில விளக்கங்கள் தேவை என்று கூறியதையடுத்து மின்இணைப்பை துண்டிக்கும்பணி நிறுத்தப்பட்டது.16-தேதி விவசாயிகள்குழு தாராபுரம் கோட்டாட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...