கோவையில் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.


கோவை: மாணவிகளின் உடல்நிலை பிரச்சனைக்கு விடுதியில் வினியோகிக்கப்பட்ட சுகாதரமற்ற தண்ணீர் தான் காரணமாக என சுகாதார மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, சுமார் 30 மாணவிகள் விடுதியின் சார்பிலேயே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர்.

லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருக்கலாம் என்பதால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் முறையாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்கிறோம் என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரியில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவிலேயே குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் 20ம் தேதி வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், கல்லூரியில் நேரடி வகுப்புகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை எல்லாம் முடிந்து மாடல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக கூறபடுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...