மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான எல்.இ.டி விழிப்புணர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இந்த வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



இந்த வாகனம் இனிவரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தில் திரையிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவை பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...