மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான எல்.இ.டி விழிப்புணர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இந்த வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



இந்த வாகனம் இனிவரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தில் திரையிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவை பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...