தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக நடைபெற்ற வருமானத்துறை சோதனை நிறைவு

கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.


கோவை: தொடர் சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத நிலையில், மீண்டும் மீண்டும் சோதனை செய்வதா என மார்ட்டின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் ஏந்த முகாந்திரம் இல்லாமல் தொடர் சோதனை செய்து வருவதாக கூறி அவரது வீட்டின் முன்பு அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு மார்டின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.



நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் நடத்தி சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத தகவலின் அடிப்படையில் எந்த ஒரு முகாந்திரமும் இன்றி தொடர் சோதனையில் ஈடுபடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் தொடர்ந்து ஐந்தாவது இன்றும் வருமானத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...