2017- 18 ஆண்டிற்கான தமிழக பட்ஜட்டை வரவேற்பதாக சைமா தலைவர் கே.கே.ராஜன் தகவல்

தமிழக அரசின் 2017- 18 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் வெளியீடானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.

மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.

தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...