தமிழக அரசின் 2017- 18 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் வெளியீடானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.
மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.
தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.
மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.
தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.