தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் - சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு, தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் வாக்குசாவடி முகவருக்கான ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்ற பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலு என்ற பாலகுமாரன், கே.செல்வகுமார், ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.



இதில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளர் பங்கு மகேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், முன்னாள் நகர கவுன்சிலர் அரசகுமார், குளத்துபாளையம் பேரூராட்சி செயலாளர் பைப் ரவிச்சந்திரன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...