கோவையில் பி.பிபார்ம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டுமாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கோவை: முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல் நாளே பேராசியர்கள் விளக்கமளித்தனர்.

ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், முனைவர் S .மோகன் மருந்து தயாரிப்பு துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார். மேலும் கற்பகம் கல்வி குழுமத்தின் PRO ஆதிபாண்டியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து முனைவர் C.S. கந்தசாமி வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர் A. நாகராஜன் பாராட்டு உரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பி.பார்ம் வேலைவாய்ப்பு பற்றி முனைவர் M. கற்பகவல்லி மற்றும் கல்லூரியின் சாதனைகளை பற்றி முனைவர் S. ராம்காந்த் பேசினார்கள்.

கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி முனைவர் A. மாதேஸ்வரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்களும் 300 பெற்றோர்களும் கலந்துகொண்டு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து நன்றி உரையை முனைவர் சசிகலா பேசினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...