திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம் பாளையம் பகுதியில் சுலோச்சனா காட்டன் மில்ஸ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மில்லில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வண்ண நூல்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மில் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு தீயணைப்பு வாகனங்கள் சென்று, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த மில்லில் முன்னதாகவே தீவிபத்து ஏற்பட்டதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நூல் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.