மூலனூர் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று ட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.

மூலனூர் சுற்று–வட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண்மைதுறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய எண்ணை வித்து பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேம்பு பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், இலுப்பை பயிருக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்கள் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...