கோவையில் வரும் மார்ச் 26-யில் முன்னாள் படைவீரர் திரளணி

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலை, சிட்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் முன்னாள் படைவீரர்கள் திரளணி நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணியளவில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் கி.எம்.ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் போர் விதவையர் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயனடையலாம்.

இம்முகாமில், சென்னை இராணுவ மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாமும் நடைபெறும். இதில், பல்வேறு படை ஆவணகாப்பகங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள இராணுவ உதவி மையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்கவுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருதல் அவசியம். 

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...