வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - கோவையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்

லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! தலைமை செயலக படத்துடன் கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வரவேற்றுள்ளனர்.


கோவை: 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம். ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜர் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர். அதே சமயம் விஜயின் பல்வேறு நலத்திட்டங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு உதாரணமாய் விளங்கி வருகிறது. இதுபோன்ற விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள், திரைப்பயணங்களை அவரது ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டி உணர்வுகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அந்த போஸ்டரில் "லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! என குறிப்பிட்டு 234 என தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர்.



அதே போன்று 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது..." என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...