வறட்சி நிவாரண நிதியில் கோவைக்கு அதிகபடியாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகர மாவட்ட செயலாளர் அருண்குமார் நீக்கப்பட்டதை அடுத்து புதிய செயலாளராக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று அமைச்சர் எஸ்.பி,வேலுமணி முன்னிலையில் அம்மன் அர்ஜுனன் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவைக்கு அறிவிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோவை வர உள்ளார்.

தொடர்ந்து, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படும். வறட்சி நிவாரண நிதியில் கோவை மாவட்டத்திற்கு அதிகபடியாக 180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தென்னை விவசாயத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமானால் தற்போதைய ஆளுங்கட்சி தான் வெற்றி பெற வேண்டும்.

மேலும், திமுக-வே நமக்கு எதிரி எனவும், ஒற்றுமையாக இருந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...