உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.


திருப்பூர்: தனி நடனம் , குழு நடனம் , இசைக்கருவிகள் வாசித்தல் ,பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்றைய கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக தனி நடனம், குழு நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



கலைத் திருவிழாவை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...