உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.


திருப்பூர்: தனி நடனம் , குழு நடனம் , இசைக்கருவிகள் வாசித்தல் ,பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்றைய கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக தனி நடனம், குழு நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



கலைத் திருவிழாவை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...