திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்த 2 பேர் - அடையாளம் கண்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் போலிசார் ஓப்படைத்தனர்.


திருப்பூர்: புற்றுநோயால் அவதியடைந்த கணவன் மனைவியுடன் கால்வாயில் குதித்து தற்கொலை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியை பூர்வீகமாகக் கொண்டவர் கோவிந்தராஜ்(80). இவருக்கு சாந்தாமணி(75) என்ற மனைவியும் ராதா, மகேஷ் என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராதா என்பவர் கோவை மாவட்டம் சூலூரிலும், மகேஷ் என்பவர் உடுமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் இருவரும் மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜ்க்கு புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவி சாந்தாமணியை அழைத்துக்கொண்டு திருமூர்த்திமலைக்கு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் காண்டூர் கால்வாயில் குதித்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் இருவர் குறித்த தகவலும் போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தற்போது இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தெரியாத பரிசோதனைக்கு பின்பு அவர்களது உடல் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...