கேரளாவில் நடைபெற்ற தேசிய ஹாண்ட்பால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சேம்பியன்

கேரளாவில் நடந்த இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக்கழகம் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.


கோவை: .வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் பழனிசாமி ,உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினார்.

கடந்த 14-15ஆம் தேதி அகில இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் 16க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும், DSA SPORTS HOSTEL திருவனந்தபுரம் அணியும் எதிர்கொண்டன. இதில் 27 - 22 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MEG ARMY பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் 28-25 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MASTER CLUB போர்ட் கொச்சி அணியை எதிர்கொண்டது. இதில் 35-20 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் SACRED HEART College, தேவாரம் கேரளா அணியை எதிர்கொண்டது. இதில் 39- 36 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் பழனிசாமி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...