உடுமலையில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன


திருப்பூர்: மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் நாளை வரை நடைபெற்று வருகிறது. நேற்று 11 -12 வகுப்புகளுக்கும் இன்று 9 -10 வகுப்புகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை 6, 7, 8 வகுப்புகளுக்கும் கலைத் விழா போட்டிகள் நடக்கிறது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டிகளில் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.



பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 200 மாணவியர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.



இன்று நடைபெறும் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவியர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் த வே சின்னராசு, ஆர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...