திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது.
திருப்பூர்: மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் போன்சாய் மரங்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது. உடுமலை இன்னர்வில் சங்கம், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போன்சாய் சங்கங்களின் உறுப்பினர்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.

இதனை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர்.

போன்சாய் என்பது தோற்றத்தை ஒரு ஒப்பனை அலங்காரத்திலிருந்து இயற்கையாகவே பசுமையான அலங்காரமாக மாற்றுகிறது. அவை அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல மறைமுகமான நன்மைகளையும் கொண்டுள்ளன.

போன்சாய் மரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும் என்று பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போன்சாய் மரங்களின் சிறப்பினை அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன் விளக்கி கூறினார்.

மேலும் இதில் கீழ்கண்ட 100க்கும் போன்சாய் மரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தனியார் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது. உடுமலை இன்னர்வில் சங்கம், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போன்சாய் சங்கங்களின் உறுப்பினர்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இதனை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர்.
போன்சாய் என்பது தோற்றத்தை ஒரு ஒப்பனை அலங்காரத்திலிருந்து இயற்கையாகவே பசுமையான அலங்காரமாக மாற்றுகிறது. அவை அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல மறைமுகமான நன்மைகளையும் கொண்டுள்ளன.
போன்சாய் மரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும் என்று பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போன்சாய் மரங்களின் சிறப்பினை அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன் விளக்கி கூறினார்.
மேலும் இதில் கீழ்கண்ட 100க்கும் போன்சாய் மரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தனியார் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.