உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர்: உடுமலை அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் மாணவர்கள் பங்கேற்பு.
உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை அ. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியை பி.மாலா வரவேற்புரை வழங்கினார்.
முதுகலை தமிழ் ஆசிரியை வி.ஜானகி இலக்கிய மன்றத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி எடுத்து உரைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செ. சரவணன் தமிழ்மொழியின் தொன்மையும் மொழியின் சிறப்புகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இதையடுத்து கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் சங்க இலக்கிய பாடல்களையும் பாரதியார் பாரதிதாசன் போன்ற தமிழ் புலவர்களின் பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை ஆர்.பார்வதி நன்றியுரை வழங்கினார்.
உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை அ. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியை பி.மாலா வரவேற்புரை வழங்கினார்.
முதுகலை தமிழ் ஆசிரியை வி.ஜானகி இலக்கிய மன்றத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி எடுத்து உரைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செ. சரவணன் தமிழ்மொழியின் தொன்மையும் மொழியின் சிறப்புகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இதையடுத்து கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் சங்க இலக்கிய பாடல்களையும் பாரதியார் பாரதிதாசன் போன்ற தமிழ் புலவர்களின் பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை ஆர்.பார்வதி நன்றியுரை வழங்கினார்.