மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்- பொதுமக்களிடம் கேட்டறிந்த கோவை ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, தார்சாலை பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ‌ சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து,



அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு வளாகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்‌, வார்டு எண்‌.99க்குட்பட்ட வெள்ளலூர்‌ பகுதியிலுள்ள அற்புதம்‌ நகரில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, வார்டு எண்‌.990க்குட்பட்ட அற்புதம்‌ நகா்‌ பகுதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ ரூ.46.33 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1.54 கிலோ மீட்ட தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, அற்புதம்‌ நகர்‌ மற்றும்‌ இந்திரா நகர்‌ பகுதிகளில்‌ வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம்‌ நேரில்‌ கேட்டறிந்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக வடவள்ளி மற்றும்‌ சோமையம்பாளையம்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையம்‌ அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத்தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ பிரரம்‌ ஆனந்த்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ தமிழ்ச்செல்வன்‌, உதவி பொறியாளாகள்‌ மதியழகன்‌, கீதாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள்‌ இளங்கோவன்‌, சுந்தாராஜன்‌, கனகராஜ்‌, உதவி பொறியாளா்கள்‌ சரண்யா, சபரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...