சமூக விரோதி கூடாரமாக மாறிய உக்கடம் பேருந்து நிலையம்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

உக்கடம் பேருந்து நிலையத்தில் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: சமூக விரோதிகளின் கூடரமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறியுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.



அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...