உக்கடம் பேருந்து நிலையத்தில் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை: சமூக விரோதிகளின் கூடரமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறியுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.

அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.
அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.