வால்பாறை அருகே காடம்பாறை பகுதியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற உடற்கல்வி ஆசிரியர் காடம்பாறை அணை தண்ணீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: காடம்பாறை பகுதியில் சுற்றுலாச் சென்று அணையில் மூழ்கி உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியரின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவில்சின்னம்பாலையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்பால்சாமி 37 வயது. இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பிரதீப்பால்சாமி மற்றும் அவர்களது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் காடம்பாறை அணை பகுதியில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பிரதீப்பால்சாமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது தூரம் தண்ணீர் இழுத்துச் சென்றதை கண்டு அவர்களது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர்.

ஆனால் தண்ணீர் அதிக அளவில் வந்ததால் பிரதீப்பால்சாமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காடம்பாறை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காடம்பாறை காவல் நிலைய போலீசார் அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்துக்கு பிரதீப்பால்சாமி உடல் மீட்கப்பட்டது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று முன் தினம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காடம்பாறை பகுதியில் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவில்சின்னம்பாலையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்பால்சாமி 37 வயது. இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பிரதீப்பால்சாமி மற்றும் அவர்களது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் காடம்பாறை அணை பகுதியில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பிரதீப்பால்சாமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது தூரம் தண்ணீர் இழுத்துச் சென்றதை கண்டு அவர்களது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர்.
ஆனால் தண்ணீர் அதிக அளவில் வந்ததால் பிரதீப்பால்சாமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காடம்பாறை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காடம்பாறை காவல் நிலைய போலீசார் அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்துக்கு பிரதீப்பால்சாமி உடல் மீட்கப்பட்டது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று முன் தினம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காடம்பாறை பகுதியில் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.