கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: வால்பாறை பகுதியில் 20 நீர் பிடிப்பு பகுதிகளுக்குள் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவு.
வால்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பதால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது கடந்த 20 ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி படித்து வந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் நேற்று காடம்பாறை செல்லும் வழியில் அப்பர் ஆழியார் அணையில் குளித்த கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்பால்சாமி உயிரிழந்தார், இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாவதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, சிறு குன்றா கூலாங்கள் ஆறு, சோலையார் ஆர்ச், ஸ்டேன்மோர் ஆறு, கெஜமுடி கூடுதுறை,சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர் வீழ்ச்சி, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, காடம்பாறை 501 டனால், சோலையார் டேம், சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு, அனலின் நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் ஆறு உள்ளிட்ட 20 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
வால்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பதால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது கடந்த 20 ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி படித்து வந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் நேற்று காடம்பாறை செல்லும் வழியில் அப்பர் ஆழியார் அணையில் குளித்த கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்பால்சாமி உயிரிழந்தார், இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாவதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, சிறு குன்றா கூலாங்கள் ஆறு, சோலையார் ஆர்ச், ஸ்டேன்மோர் ஆறு, கெஜமுடி கூடுதுறை,சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர் வீழ்ச்சி, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, காடம்பாறை 501 டனால், சோலையார் டேம், சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு, அனலின் நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் ஆறு உள்ளிட்ட 20 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.