பல்லடம் அருகே குடிநீர் வசதிகேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் முறையான சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக ஊராட்சி தலைவர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11 வது ஓம் சக்தி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இப்பகுதியில் முறையான சாலை வசதி அமைத்து தர கோரியும் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் உள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த ஊராட்சி தலைவர் இன்னும் நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை சரி செய்வதாக உறுதியளித்ததன் பிறகு அங்கிருந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...