உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாடு - மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்

இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் நடைபெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: உடுமலையில் நடந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாடு நடைபெற்றது.



மாநாட்டில் தேங்காய் உரிப்பதற்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த அளவு கூலி பெற்றுக் கொண்டு தேங்காய் உரிக்கும் தொழிலை ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது எனவே தமிழக அரசு தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



பேரவை மாநாட்டில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார், தொழிற்சங்கம் மாவட்ட அமைப்பாளர் பால் நாரயணன், குடிமங்கலம் சுந்தர்ராஜன் மற்றும் உடுமலை குடிமங்கலம் நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...