அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம்ம் கழுதகட்டி ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் ரோந்து சென்றபோது கழுதகட்டி ஓடை பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது ஆண் புலி இறந்து கிடப்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.



தற்சமயம் திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார்கள். இறந்து கிடைக்கும் புலி உயிர் இழந்தது எவ்வாறு, யாரேனும் வேட்டையாடினார்களா அல்லது வயது மூப்பின் காரணமாக புலி இறந்தாத என தேசிய புலிகள் ஆனைய வழிகாட்டுதல்படி புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபின் தான் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிர் இழந்து உள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...