கோவையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கோவை தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 20- ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் தற்போது 5-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானத்தில் இன்று காலை திரண்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...