ரூ. 7.40 லட்சம் மோசடி - மெக்கானிக் கடை உரிமையாளர் கைது

சொகுசுகாரில் மாற்றம் செய்து தருவதாக கூறி மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: ரூ.7.40 லட்சம் பண மோசடி செய்தவரை கோவை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்மணி (வயது 45). இவரது நண்பர் ஒருவர் சொகுசு கார் ஒன்றை கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக அதில் சில மாற்றங்கள் செய்து தருமாறு கூறினார். இதனையடுத்து அருண்மணி ஆன்லைன் மூலமாக கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தில் உள்ள ஓர்க் ஷாப் இருப்பதை பார்த்தார்.

இதையடுத்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபால் (43) என்பவரை தொடர்பு கொண்டு, சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு, கார் மற்றும் ரூ.2.50 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.

தொடர்ந்து மேலும் பல்வேறு தவணைகளாக ரூ.4.90 லட்சம் என, மொத்தம், ரூ.7.40 லட்சம் பணத்தை கோபாலிடம் கொடுத்தார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர் குறித்த காலத்தில், காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டார். இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...