நீட் தேர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து திராவிடர் கழகத்தின் மாணவர் அணியின் மாநில துணை செயலாளர் காமராஜ் தலைமையில் புறப்பட்டது.
சமீபத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் இளைஞர் அமைப்புகளின் சார்பில் மாநில அளவில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று சென்னை, தர்மபுரி, கோவை, தென்காசி, கடலூர் ஆகிய ஐந்து மையங்களில் இருந்து புறப்பட்டு வரும் 21ம் தேதி மாலை விருத்தாசலத்தில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடத்தப்படவும் உள்ளது. இதில் கோவையில் இருந்து புறப்பட்ட இந்த பிரச்சார பயணத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர்.