உடுமலை சௌடாம்பிகா அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் 25ஆம் தேதி இன்று முதல் நவராத்திரி விழா நடைபெறும் நிலையில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மாரியம்மன் கோவில் குருக்கள் உமா மகேஸ்வரன் தலைமையில் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.



பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருகல்யாண வைப்போகத்தை கோவில் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...