ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது, 100 சதவீத வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். சேலத்தில் நடந்த நலதிட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது, 100 சதவீத வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். சேலத்தில் நடந்த நலதிட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார்.