இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவுரை நிறை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் வேல்முருகன் 42. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜு, புவனேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்செல்வன், தாமரைச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் வேல்முருகன் ராஜூவும் மொபைலில் பேசிக்கொண்டபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது, ராஜு உட்பட மேற்கூறிய நான்கு பேரும் சேர்ந்து, கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...