துர்க்கையம்மன் கோவிலில் அன்னதானம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாமி தரிசனம் செய்தார்.


திருப்பூர் தாராபுரம் :துர்க்கையம்மன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்வழி பங்கேற்றார்

தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த கோவிலில் அமர்ந்து நெல் மணியில் முதல் எழுத்து எழுதிய பின்பு பள்ளியில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கோவில் பக்தர்கள் சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பிறகு குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்களிடம் உரையாடினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...