உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக எந்தொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


திருப்பூர்: உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைதிடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது. குறிப்புதவி நூலகமான இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாள்தோறும் வந்து புத்தகங்களை வாசித்து குறிப்புகளை எடுத்து தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மணிமண்டபத்தில் நிகழும் அமைதியான நிலையும் சுற்றுச்சூழலும் புத்தகங்களை வாசிக்கும் போட்டித் தேர்வுகளுக்கு உதவிகரமாக உள்ளதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் நாராயணவி மணிமண்டபத்தை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதை முறைப்படி சீரமைப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சுற்றுச்சுவரின் ஒரு சில பகுதியில் அஸ்திவாரம் சேதமடைந்து ஆட்டம் கண்டு வருகிறது. இதனால் சுவர் அடியோடு பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி சேதம் அடைந்த சுவற்றின் வழியாக மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் மணிமண்டப வளாகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். அங்கு அமர்ந்து மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போட்டி தேர்வர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. எனவே உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...